ஸ்ரீதிவ்யாஆறு வருடங்கள் படம் எதுவும் இல்லாத நிலையிலும் ரசிகர்கள் அவர் மீது கொண்ட பாசம் என்றும் மாறுவதில்லை.

 ஸ்ரீதிவ்யா ஏப்ரல் 1 1993 ஹைதராபாத்தில் பிறந்தார்.

இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனது சிறுவயதிலே படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் அதற்கு பல அவார்டுகளையும் பெற்றுள்ளார்.

பின்னர் இவர் தெலுங்கு மானராசா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தெலுங்கில் பல படங்களை நடித்துள்ளார்.

 தமிழ் திரை உலகுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் எந்த வெற்றி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் ஸ்ரீதிவ்யாவிற்கு பல ரசிகர்கள் உருவாகினார். அதை தொடர்ந்து தமிழில் ஜீவா ,காக்கி சட்டை, ஈட்டி ,மருது, பெங்களூர் நாட்கள் ,வெள்ளைக்காரதுரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்த பின்னர் அவர் நடித்த எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. 

ஆறு வருடங்கள் கழிந்து தற்போது ரெய்டு என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் ஸ்ரீதிவ்யா இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

ஏப்ரல் 1 இன்று ஸ்ரீ திவ்யா தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு வாழ்த்துக்கள் அவரது ரசிகர்கள் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றார்கள். ஐந்து வருடங்கள் படங்கள் எதுவும் நடிக்காத நிலையிலும், ரசிகர்கள் அவர் மீது கொண்ட பாசம் என்றும் மாறுவதில்லை என்ற வண்ணம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து அதனை Twitter பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றார்கள்.

இன்று பிறந்தநாள் காணும் ஸ்ரீதிவ்யாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். 

Edits ...






Comments